அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்


அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
x

அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

மத்திய அரசு அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், புதுக்கோட்டையிலும் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரிசி ஆலைகள் மூடப்பட்டன. மேலும் ஒரு சில அரிசி கடைகளும் திறக்கப்படவில்லை. ஆலங்குடியில் அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல், அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் மற்றும் அரிசி சில்லறை வியாபாரிகள் ேவலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story