சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நீக்க காலத்தை முறைப்படுத்தி ஆணை வழங்க கோரி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

ஊட்டி,

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெள்ளிங்கிரி, இணை செயலாளர் ஜான்பாஸ்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள், தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.20,200, தரஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். பணியின் போது சாலை பணியாளர்கள் உயிரிழந்தால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நியமனம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கோட்ட செயலாளர் ஜெகந்தான், மாநில பொது செயலாளர் அம்சராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story