அழுகிய நிலையில் ஆண் பிணம்


அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

இரணியல் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

இரணியல் அருகே உள்ள கீழ் மணியன்குழி பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதை போலீசார் கண்டனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story