அழுகிய நிலையில் ஆண் பிணம்


அழுகிய நிலையில் ஆண் பிணம்
x

நெல்லிக்குப்பம் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடநதது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

நெல்லிக்குப்பம்:

நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் சாலையில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே வீட்டுமனை நிலத்தில் உள்ள பழைய மோட்டார் கொட்டகையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது அருகில் அறுந்த நிலையில் கயிறு ஒன்று கிடந்தது. அதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்?, அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story