ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் சிறையில் அடைப்பு


ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் சிறையில் அடைப்பு
x

ரூ.4 லட்சம் மோசடி செய்தவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 65). இவரது மகன் முத்துகருப்பன் எம்.பி.ஏ. முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதி அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இதனையறிந்த விராலிமலை சக்தி நகரை சேர்ந்த அழகுமணி மகன் சுப்பிரமணி என்பவர் முத்துகருப்பனை டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சி பெற வைத்து, கிராம நிர்வாக அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி கண்ணதாசனிடமிருந்து ரூ.4 லட்சம் பெற்றுக்கொண்டு இதுநாள்வரை வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கண்ணதாசன் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சுப்பிரமணி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்திலையில் நேற்று சுப்பிரமணியை விராலிமலை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story