ரூ.1.30 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை


ரூ.1.30 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனை
x

பண்டிகையையொட்டி காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.1.30 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானது.

தர்மபுரி

காரிமங்கலம்

வாரச்சந்தை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கூடுவது வழக்கம். இந்த சந்தையில் ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஆந்திர உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் வந்து கால்நடைகள் மற்றும் காய்கறி உள்ளிட்டவற்றை வாங்கி செல்வார்கள்.

இந்தநிலையில் நேற்று காரிமங்கலத்தில் வாரச்சந்தை கூடியது. இதையொட்டி விவசாயிகள், வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகள், கோழிகள், மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். யுகாதி பண்டிகையையொட்டி நேற்று சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. எடைக்கு ஏற்றவாறு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை விற்பனையானது. சந்தையில் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது .

ரூ.1.30 கோடிக்கு விற்பனை

இதேபோல் நாட்டு கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனையானது. சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனையானது. இந்த ஆடுகள், கோழிகளை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கோழிகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. ஆடுகள், கோழிகள் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காரிமங்கலம் வாரச்சந்தையில் நேற்று ஒரே நாளில் ரூ.1.30 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story