மரக்கன்று நடும் விழா


மரக்கன்று நடும் விழா
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:47 PM GMT)

மரக்கன்று நடும் விழா நடைபெற்றது

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் உலக வன தின விழாவை முன்னிட்டு பேரூராட்சி சார்பில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியான வளம் மீட்பு பூங்காவில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார். செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். இதில் முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியை தூய்மை பகுதியாக மாற்றுவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர்கள் நாகஜோதி, பாரதி, ராஜேஷ் மேற்பார்வையாளர் செல்வகுமார் சரவணன் குமார், பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story