சத்தியமங்கலத்தில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சத்தியமங்கலத்தில்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

சத்தியமங்கலத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்

ஈரோடு

சத்தியமங்கலத்தை அடுத்த கோம்புபள்ளம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி கீதா லட்சுமி (வயது 49). கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ராமமூர்த்தி இறந்துவிட்டார். இதனால் கீதா லட்சுமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள தொட்டில் கொக்கியில் கயிற்றால் தூக்குப்போட்டு கொண்டார். இதை கண்டதும், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கீதாலட்சுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story