பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

பள்ளி மாணவி

திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருக்கு மூன்று மகள்கள் உண்டு. இதில் மூத்த மகள் லாவண்யா (வயது 15), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நாகராஜின் 2-வது மகளுக்கு கண் பார்வை குறைபாடு உள்ளதாக தெரிகிறது. அவர் திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்புறமுள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறார்.

தற்கொலை

சம்பவத்தன்று அவர் வீட்டில் இருந்து அப்பகுதியில் உள்ள சாலைக்கு வந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அவரது தாய், தங்கையை கவனித்துக் கொள்ளாமல் எங்கே சென்றாய் என்று லாவண்யாவை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த லாவண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story