பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை - அரசு பஸ் டிரைவர் கைது
திருப்பூர் அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சீதா நகரை சேர்ந்த மரியதாஸ் மகன் ஆரோக்கியதாஸ் (58). இவர் தாராபுரம் அரசு போக்குவரத்து கழகம் தாராபுரம் பணிமனையில் டிரைவராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று ஆரோக்கியதாஸ் அதே பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுவன் பெற்றோரிடம் தனக்கு டிரைவர் ஆரோக்கியதாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததை பற்றி தெரிவித்து உள்ளார். பின்னர் அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா (பொறுப்பு) ஆரோக்கியதாசிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது ஆரோக்கியதாஸ் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.பினனர் தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.