நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை பள்ளிகளுக்கு விடுமுறை


நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாளை  பள்ளிகளுக்கு விடுமுறை
x

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது எனவும் கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை. எனவே தொடர்ந்து மீட்பு பணி விரைவாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நாளை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது எனவும் கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


Next Story