நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு
நிலத்தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள வேலியம்பாக்கத்தை சேர்ந்தவர் சுபாஷ் மனைவி சத்யா (33). சுபாசும், சுரேசும் (46) அண்ணன் தம்பிகள் ஆவர். இவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் அருகருகே உள்ளது. சுபாஷ், தனது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். சுரேசின் நிலத்து வரப்பில் தண்ணீர் ஏறி சுபாஷின் நிலத்திற்கு வந்ததால் அவர் நிலத்து வரப்பின் உயரத்தை ஏற்றியுள்ளார். இதனால் சுரேஷ், அவரது மனைவி வாசுகி ஆகியோர் சேர்ந்து சுபாஷிடம் பிரச்சினை செய்து அவரை அரிவாளால் இடது உள்ளங்கையில் வெட்டினர். இதை தடுக்க வந்த அவரது மனைவி சத்யாவையும் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சுரேஷ், வாசுகி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story