பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

அம்மாப்பேட்டை அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய மினி பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே குளிச்சப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மனைவி இளையநிலா (வயது 35). இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் இளையநிலாவின் உறவினர் இளங்கோவன் (35). மினி பஸ் கண்டக்டர். இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இளங்கோவன், இளையநிலாவிடம் தகராறு செய்ததோடு அவரை திட்டி கைகளால் தாக்கி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளையநிலாவின் இடது கையில் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இளையநிலா கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.







Next Story