பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

திசையன்விளை அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மற்றொரு பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே ஆனைகுடி மேல தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மனைவி சக்திகனி (வயது 48). அதே தெருவை சேர்ந்தவர் லிங்கபாண்டி மனைவி ஜோஷா (46). ஆனைகுடி பஞ்சாயத்து சார்பில் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிநீரை ஜோஷா மோட்டார் வைத்து உறிஞ்சியுள்ளார். இதனால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் வரவில்லை. இதுகுறித்து சக்திகனி பஞ்சாயத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோஷா, சக்திகனியை அவதூறாக பேசி அவரது தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சக்திகனி இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி வழக்குப்பதிவு செய்து ஜோஷாவை வலைவீசி தேடி வருகிறார்.


Next Story