குன்னம் அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு `சீல்'


குன்னம் அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு `சீல்
x

குன்னம் அருகே அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பாருக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுக்கு மாதாந்திர தொகை செலுத்தாமல் இயங்கும் டாஸ்மாக் பார்களை பூட்டி சீல் வைக்குமாறு பெரம்பலூர் மாவட்ட டாஸ்மார்க் மேலாளருக்கு திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் மாலதி உத்தரவிட்டார். அதன்படி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளக்கா நத்தம் மதுபான கடையில் டாஸ்மாக் பார் ஒன்று அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் திருமாறன், தாசில்தார் தர்மதுரை ஆகியோர் அந்த பாருக்கு சீல் வைத்தனர். அப்போது சிலர் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story