பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

கண்டனூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை

காரைக்குடி,

பேரூராட்சிகளின் ஆணையர் உத்தரவின் பேரில், சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் வழிகாட்டுதலின்படி, கண்டனூர் பேரூராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான ஒட்டுமொத்த துப்புரவு முகாம், சமுதாய கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், கண்டனூர் சிட்டாள்ஆச்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது..இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செயல் அலுவலர் பெலிக்ஸ் பேரூராட்சி தலைவர் சங்கீதா துணைத்தலைவர் மீனாள் பரிசுகளை வழங்கினர்.

பின்னர், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ் தலைமையில் பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர், அப்போது பேக்கரி, மளிகை, மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பாலித்தீன் பைகள், கப்புகள் கைப்பற்றப்பட்டன. அதனை பயன்படுத்தியவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.


Related Tags :
Next Story