கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது


கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது
x

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

திருமங்கலம்,

கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா பறிமுதல்

திருமங்கலம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக எஸ்.பி. தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் போடுவதற்கான பேப்பர் பண்டல்களும், ஒரு பெரிய பொட்டலமும் இருந்தது.

மேலும் வீட்டில் 4.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக முகமது ஷாபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4.5 கிலோ கஞ்சா, ரூ.ஒரு லட்சத்து 71 ஆயிரம் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவம்

அதேபோல் திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் அஜய் (21), தனக்கன்குளம் கார்த்திகாநகர் கண்ணன் (32), தீபக்குமார் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, வாள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story