தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,291 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,291 வழக்குகளுக்கு தீர்வு
x

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,291 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 37 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,291 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.3 கோடியே 37 லட்சம் வசூல் செய்யப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, நாடு முழுவதும் நேற்று முன்தினம் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டது.அதன்படி, நாகை மாவட்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீர்வு மையத்தில் நடந்தது.

இதில் போக்சோ நீதிமன்ற நீதிபதி மணிவண்ணன், நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி நாகராஜன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான கார்த்திகா, சார்பு நீதிபதி சீனிவாசன், குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர் நாகப்பன், இரண்டாவது நடுவர் சண்மிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

3,291 வழக்குகளுக்கு தீர்வு

மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய குற்ற வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பணமோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்பட 15 ஆயிரத்து 303 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.இதில் 3 ஆயிரத்து 291 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.3 கோடியே 37 லட்சம் வசூல் செய்யப்பட்டது.


Next Story