மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு தீர்வு
x

மக்கள் நீதிமன்றத்தில் 149 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கோர்ட்டுகளிலும் அரியலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு, செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நேற்று அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பாக சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கிறிஸ்டோபர் தலைமை தாங்கி தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கற்பகவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் மற்றும் நீதித்துறை நடுவர் அறிவு ஆகியோர் அமர்வில் பங்கேற்றனர். வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன், சங்க செயலாளர் முத்துக்குமரன், செல்வராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

வழக்குகளுக்கு தீர்வு

ஜெயங்கொண்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் லதா, நீதித்துறை நடுவர் ராஜசேகரன் மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர். செந்துறையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அக்னஸ் ஜெப கிருபா மற்றும் வழக்கறிஞர் சங்கர் ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 542 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில், 2 சிவில் வழக்குகளுக்கு ரூ.7 லட்சத்து 10 ஆயிரத்து 150-க்கும், 14 மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூ.45 லட்சத்து 52 ஆயிரத்து 554-க்கும் மற்றும் ஜெயங்கொண்டம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான 112 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வழக்குகளில் 21 வழக்குகளுக்கு ரூ.8 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் தீர்வு காணப்பட்டது. இதில் வக்கீல்கள், போலீசார், அரசு அதிகாரிகள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story