நிலப்பிரச்சினை சிறப்பு விசாரணை முகாமில் 20 மனுக்களுக்கு தீர்வு
நிலப்பிரச்சினை சிறப்பு விசாரணை முகாமில் 20 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்த்துறை சார்பில் பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முகமது அபுபக்கர் மற்றும் போலீஸ் ஏட்டுகள், தாசில்தார் சுகுணா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை பெற்று விசாரணை செய்தனர். இதில் மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 20 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story