மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 Sep 2023 9:15 PM GMT (Updated: 9 Sep 2023 9:15 PM GMT)

பந்தலூர் மக்கள் நீதிமன்றத்தில் 205 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் லோக் அதாலத் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. நீதிபதி சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் நிலுவையில் இருந்த 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 205 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. குற்றவியல் வழக்குகள் தொடர்பாக ரூ.3 லட்சத்து 92 ஆயிரம், காசோலை மோசடி வழக்குகள் தொடர்பாக ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டது. இதில் நீதிமன்ற ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story