மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 3 March 2023 7:39 PM GMT (Updated: 4 March 2023 10:10 AM GMT)

மக்கள் நீதிமன்றத்தில் 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல் மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதனடிப்படையில் உரிய உரிமையாளர்களிடம் நிலப் பட்டா வழங்க, ஜெயங்கொண்டம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் மூலம் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தை ஜெயங்கொண்டம் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான லதா முன்னிலையில் அரசு வக்கீல்கள் மோகன் ராஜ், செந்தில்குமார் மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள் நடத்தினர். இதில் 40 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க உத்தரவிட்டப்பட்டது.

இதன் மூலம் உரிய நில உரிமையாளர்களுக்கு உடனடியாக பட்டா மாற்றம் செய்து வழங்கப்படும் என்று ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) ராஜமூர்த்தி கூறினார். மேலும் மக்கள் நீதிமன்றம் மூலம் அந்தந்த பகுதியின் நில உரிமையாளர்களிடம் நிலம் ஒப்படைக்கும் பணி மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.


Next Story