தர்மபுரி, அரூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


தர்மபுரி, அரூர் பகுதிகளில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Nov 2022 6:45 PM GMT (Updated: 3 Nov 2022 6:45 PM GMT)

தர்மபுரி, அரூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தர்மபுரி

தர்மபுரி, அரூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தர்மபுரி

தர்மபுரி, பைசுஅள்ளி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரத்துக்குட்பட்ட பஸ் நிலையம், கடைவீதி, ஏ.ஜெட்டிஅள்ளி, அன்னசாகரம், ஏ.ரெட்டிஅள்ளி, விருபாட்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நெசவாளர் காலனி அம்பேத்கர் காலனி, நேதாஜி பைபாஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல தர்மபுரி பகுதியில் உள்ள ராஜாப்பேட்டை, சோலைக்கொட்டாய், நூலஅள்ளி, கடகத்தூர், பழைய தர்மபுரி, மாட்லாம்பட்டி கெங்குசெட்டிப்பட்டி, காளப்பனஅள்ளி, குப்பாங்கரை, வெள்ளோலை, முக்கல்நாயக்கன்பட்டி குப்பூர், மூக்கனூர், குண்டல்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

அரூர்

இதேபோல அரூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, எல்லப்புடையாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று மின்வாரிய செயற்பொறியாளர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.


Next Story