விவசாயிக்கு அரிவாள் வெட்டு


விவசாயிக்கு அரிவாள் வெட்டு
x

கபிஸ்தலம் அருகே விவசாயி அரிவாளால் வெட்டப்பட்டார்

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி ஊராட்சி தேவன்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). விவசாயி. இவருக்கும் அதே ஊரில் வசிக்கும் ராமன் மற்றும் அவரது தம்பி லட்சுமணன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த ராமன், லட்சுமணன் இருவரும் கார்த்திகேயனை கீழே தள்ளி அரிவாளால் வெட்டினர். இதில், படுகாயம் அடைந்த கார்த்திகேயன் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில், கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை அரிவாளால் வெட்டிய அண்ணன்-தம்பியை வலைவீசி தேடி வருகின்றனர்.






Next Story