தர்மபுரியில் ரூ.5½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை


தர்மபுரியில் ரூ.5½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
x

தர்மபுரியில் ரூ.5½ லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுக்கூடுகள் ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு நேற்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1,039 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.675-க்கும், குறைந்தபட்சமாக ரூ.320-க்கும், சராசரியாக ரூ.532.74- க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 53 ஆயிரத்து 966 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.


Next Story