பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு


பட்டுக்கூடுகள் விலை அதிகரிப்பு
x

தர்மபுரி ஏல அங்காடியில் பட்டுக்கூடுகள் விலை அதிகரித்துள்ளது.

தர்மபுரி

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடு வரத்து அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் 1364 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் 1 கிலோ 661-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.21 அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.682-க்கும், குறைந்தபட்சமாக ரூ.335-க்கும், சராசரியாக ரூ.524.44-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 470-க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது.


Next Story