தூத்துக்குடியில் வீடுபுகுந்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு


தூத்துக்குடியில் வீடுபுகுந்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் வீடுபுகுந்து வெள்ளி பொருட்கள், பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நேதாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மரியரவி (வயது 60). இவர் வெளிநாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன்கள் வெளியூரில் இருப்பதால், மரியரவியும், அவரது மனைவியும் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 30-ந் தேதி இருவரும் சென்னையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். நேற்று முன்தினம் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, ஜன்னல் கம்பி அறுத்து வளைக்கப்பட்டு இருந்தது. பதறிப்போன அவர்கள் வீட்டிற்குள் ெசன்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து வீடுபுகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


Next Story