கழுத்தை அறுத்து பெண் படுகொலை


கழுத்தை அறுத்து பெண் படுகொலை
x

குமராட்சி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணின் கழுத்தை கத்தியால் கணவர் அறுத்து கொலை செய்தார்.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சி அருகே கோப்பாடி ரோட்டு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 45). இவரது மனைவி இன்பவள்ளி (38). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். தமிழ்ச்செல்வன் கேரளாவில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் தனது மனைவி இன்பவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை மதுபோதையில் தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், இன்பவள்ளிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இன்பவள்ளியின் கழுத்தை அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கைது

இது குறித்த தகவலின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெகடர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இன்பவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story