திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
x

பயணி ஒருவரிடம் இருந்து 797 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பயணி ஒருவர் தனது ஷூவில் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 797 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story