பாம்பு கடித்து சிறுமி சாவு


பாம்பு கடித்து சிறுமி சாவு
x

பாம்பு கடித்து சிறுமி பரிதாபமாக இறந்து போனாள்.

தேனி

அல்லிநகரம் அருகே உள்ள மதுராபுரியை சேர்ந்தவர் நாகராஜன். செங்கல் காளவாசல் நடத்தி வருகிறார். இவரது மகள் ரத்தினம்(வயது8) இன்று காளவாசல் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவளை ஒரு விஷ பாம்பு கடித்துவிட்டது. இதையடுத்து அவள் பெரியகுளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். பின்னர் அவள் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள்.

அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story