மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
x

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.

முகாமில் பல்வேறு வகையான மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் விண்ணப்பித்தனர்.

அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர்.

முகாமிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story