பொதுவினியோக திட்ட குறைகளை களைய 13-ந் தேதி சிறப்பு முகாம்


பொதுவினியோக திட்ட குறைகளை களைய 13-ந் தேதி சிறப்பு முகாம்
x

பொதுவினியோக திட்ட குறைகளை களைய சிறப்பு முகாம் பெரம்பலூரில் 13-ந் தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் தாலுகா எசனை கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பெரம்பலூர் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், பெரம்பலூர் தலைமையிலும், குன்னம் தாலுகா துங்கபுரம் (தெ) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், பெரம்பலூர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உதவி ஆணையர் (கலால்) பெரம்பலூர் தலைமையிலும் 13-ந்தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்


Next Story