முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

நாமக்கல் மாவட்டத்தில் ஆவணி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாமக்கல்

ஆவணி மாத சஷ்டி

பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆவணி மாத சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், நன்செய்இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவில் உள்ள ராஜாசுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி மற்றும் கந்தம்பாளையம் அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சஷ்டியையொட்டி சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

காளிப்பட்டி கந்தசாமி

இதேபோல் சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோவிலில் முருகனுக்கு வளர்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, மருவு, மரிக்கொழுந்து, அரளி, துளசி பலவிதமான மலர்களால் கோவில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் சுவாமிக்கு பலவிதமான வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், ராஜகவச ஆடை அணிவித்து வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹாபூஜை நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வள்ளி - தெய்வானையுடன் முருகன் பல்லக்கில் திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது.


Next Story