நவராத்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


நவராத்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி 5-ம்நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் கரியாம்பட்டி, புகழூர், புன்னம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story