கோவில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் திருட்டு


கோவில் உண்டியலை தூக்கிச்சென்று பணம் திருட்டு
x

கோவில் உண்டியலை தூக்கிச்சென்று பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை, வெண்பாவூர் சாலை பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு, உண்டியலை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். உண்டியலை வெண்பாவூர் சாலையில் கண்டெடுத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story