3 ஆடுகள் திருட்டு


3 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 7 May 2023 7:00 PM GMT (Updated: 7 May 2023 7:01 PM GMT)

வேடசந்தூர் அருகே 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள குஞ்சுவீரன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் 10 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீசில் முருகன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேடசந்துர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடு, கோழிகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவம் அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். ஆடு, கோழிகளை திருடுபவர்களை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story