தடையை மீறி பாலித்தீன் பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை


தடையை மீறி பாலித்தீன் பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
x

தடையை மீறி பாலித்தீன் பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

தடையை மீறி பாலித்தீன் பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பாலித்தீன் பைக்கு தடை

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி(பாலித்தீன்) பொருட்களின் பயன்பாட்டிற்கு 1-7-2022 முதல் தடை விதித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது. மக்காத தன்மை கொண்ட நெகிழி பயன்பாட்டால் உலக அளவில் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும், முக்கியமாக கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்துக்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இதை சரி செய்ய வேண்டிய அவசர நிலையில் நாம் உள்ளோம்.

நெகிழி பொருட்களினால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்கும் வகையில் பொது மக்களிடமிருந்து நெகிழியினை கிலோ ரூ.8-க்கு வாங்கும் நெகிழி மீள வாங்கும் கொள்கையினை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அபராதம்

விதிமுறைகளை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை தயாரிக்கும் அல்லது விற்பனை செய்யும் நிறுவனங்கள் அல்லது கடைகள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு உரிய அபராதம் ஊராட்சி நிர்வாகத்தால் விதிக்கப்படும்.

மீண்டும் மஞ்சப்பை கொள்கையை ஏற்று நெகிழி பொருட்களுக்கு மாற்றாக துணி, காகிதம், சணல் பைகள், பாக்குமர இலை, அலுமினியத்தாள் மற்றும் கண்ணாடி குவளைகளை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story