மாணவருக்கு கத்திக்குத்து


மாணவருக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:46 PM GMT)

தேவதானப்பட்டி அருகே பள்ளி மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லாக்காப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சக்திவேல் (வயது 17). இவர், அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவருக்கும், அதே பள்ளியில் படிக்கும் மற்றொரு மாணவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது அவர்களை சக மாணவர்கள் சமாதானப்படுத்தி விலக்கி விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சக்திவேல், தனது நண்பர்களுடன் சில்வார்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 மாணவர்கள் வந்தனர். அவர்களில் ஒரு மாணவர் சக்திவேலை பிடித்து கொண்டார். மற்றொரு மாணவர் சக்திவேலை கத்தியால் குத்தினார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி சென்று அந்த மாணவர்களை பிடிப்பதற்குள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து படுகாயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர். மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story