கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

செய்யாறு

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரிதாஸ் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 2021-22-ம் பருவ ஆண்டில் வெட்டி ஆலைக்கு அனுப்பிய கரும்புக்கு கடந்த 5 மாதங்களாக பணம் தராமல் விவசாயிகளை அலைகழிக்கும் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும்,

ஆலையில் இருப்பிலுள்ள சர்க்கரையை விற்க அனுமதி வழங்காத மத்திய அரசையும், ஆலையிலிருந்து பெற்ற ரூ.22 கோடி மதிப்பிலான இணை மின்சாரத்திற்கு உரிய பணம் தராமலும், வழிவகை கடன்பெற அனுமதிக்காமல் காலம் தாழ்த்தும் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும் கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்,

வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்று வழங்க வேண்டும்,

கரும்பு சுமை வண்டிகள் ஆலைக்குள் நுழையும் போதே எடைபோட வசதியாக நுழைவாயிலில் எடைமேடை அமைத்திட வேண்டும், உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தியும் கரும்பு உற்பத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.


Related Tags :
Next Story