ஓசூர் அருகேதொழிலாளி தற்கொலை


ஓசூர் அருகேதொழிலாளி தற்கொலை
x

ஓசூர் அருகே தொழிலாளிதூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் தாலுகா பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 26). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கஜேந்திரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story