காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை


காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 Oct 2023 7:45 PM GMT (Updated: 24 Oct 2023 5:09 PM GMT)

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே விஷம் குடித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டி வேடிச்சம்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கிரிஜா (வயது 14). இவள் ராமாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து பெற்றோர் மகளிடம் கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்த சிறுமி கடந்த 9-ந் தேதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மாணவியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story