தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


தேன்கனிக்கோட்டை அருகே  இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட பெட்டமுகிலாளம் அருகே உள்ள ஜெயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மகள் ஹேமபிரியா (வயது 22).

இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என்று தெரிகிறது.

விசாரணை

இந்த நிலையில் சம்பவத்தன்று ஹேமபிரியா உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story