ராயக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


ராயக்கோட்டை அருகே  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

ராயக்கோட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அடுத்த அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் சிவன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் தனது தாயிடம் குடும்ப சொத்தில் தனக்கு சேர வேண்டிய பாகத்தை பிரித்து தருமாறு கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சொத்தை பிரித்து கொடுக்க அவரது தாய் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சிவன் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவன் உயிரிழந்தார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story