அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம்


அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம்
x

சங்கராபுரம், தியாகதுருகம் பகுதி அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத அமாவாசை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட 6 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அம்மன் கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் செவ்வாடை அணிந்து தீச்சட்டி ஏந்தி கோவிலை 3 முறை சுற்றி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சித்திரை மாத அமாவாசையை யொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்பட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதிஉலா வந்து ஊஞ்சலில் அமரவைக்கப்பட்டார். தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டுப்பாடி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் தியாகதுருகம் மற்றும் அதனை சுற்றியுள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story