டாஸ்மாக் கடையை மூட வேண்டும்


டாஸ்மாக் கடையை மூட வேண்டும்
x

டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பொதுமக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றனர். அப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்த நிலையில் தற்போது டாஸ்மாக் கடை அருகே பார் கொண்டுவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாவார்கள். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றவேண்டும் என ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் மனு அளித்தனர்.


Next Story