வாலிபர் தற்கொலை


வாலிபர் தற்கொலை
x

வேடசந்தூர் அருகே, விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 31). பிட்டரான இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று காலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story