கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜோலார்பேட்டை ரெயில்வே மைதானம் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் ஒருவர் பிடிபட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் குணா என்கிற குணசேகரன் (29) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்தபோலீசார் அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வினோத் (29) என்பவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story