வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் மராட்டியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் திருப்பதி (வயது 28). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்தநிலையில் திருப்பதிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14-ந் திருப்பதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்துள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேலும் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து அவரது சகோதரி வள்ளி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story