விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் மகன் பிரசாத் (வயது 31). கூலித்தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயிற்று வலிதாங்க முடியாமல் பிரசாத் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசாத் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணகிரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story