வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாகர்கோவிலில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து ெகாண்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்ெகாலை செய்து ெகாண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாலிபர்

நாகர்கோவில் அறுகுவிளையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் அபி கிறிஸ்டின் (வயது 23), பாலிடெக்னிக் படித்துள்ளார். இவர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்காக முயற்சித்துள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் அபி கிறிஸ்டின் மனவேதனையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர்.

இந்த நிலையில் அபி கிறிஸ்டின் நேற்று படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story